தேர்தல் வாக்காளர் பட்டியல் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட உள்ளது

Date:

இதுவரை வருடத்துக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட்டு வந்த தேர்தல் வாக்காளர் பட்டியல் இனிமேல் வருடாந்தம் மூன்று தடவைகள் புதுப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பான சட்ட மூலம் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டமூலத்தின் படி 18 வயதை அடைந்த ஒருவர் தான் அந்த வயதை அடைந்த 2 வார காலத்துக்குள் தனது மாவட்ட அலுவலகத்திற்கு சென்று தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும். வாக்காளர் பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படும் வரை அவர் காத்திருக்க தேவையில்லை .

தனது தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றை சமர்ப்பித்து தானாகவே நேரடியாக சென்று மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் உரிய பிரிவில் தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும். அடுத்து அடுத்து வரும் தேர்தல்களில் அதிகப்படியான வாக்காளர்களை பங்கேற்கச் செய்யும் நோக்கிலேயே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கும் மே மாதம் 31ஆம் திகதி க்கும் இடைப்பட்ட காலத்தில் முதலாவது வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பும் அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 1ஆம் திகதி க்கும் செப்டம்பர் மாதம் 30-ஆம் திகதி க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டாவது வாக்காளர்பட்டியலும்
தயாரிக்கப்படும் மூன்றாவது வாக்காளர் பட்டியல் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஜனவரி 31 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த காலப்பகுதிக்குள் தயாரிக்கப்படும் புதிய வாக்காளர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல் உரிய மாவட்ட அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு காட்சிக்கு வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து அது இரண்டு வார காலத்துக்குள் பிரதான பட்டியலோடு சேர்த்துக்கொள்ளப்படும். இதன்படி ஒருவர் 18 வயதை அடைந்த கையோடு அடுத்து வரும் தேர்தலில் வாக்களிக்க கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...