புத்தாண்டு பண்டிகை தினங்களில் புகையிரத சேவைகள் சில ரத்து

Date:

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக புகையிரதங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 புகையிரத பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) இரண்டு நாட்கள் மாத்திரம் புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், புத்தாண்டை முன்னிட்டு கிராமப்புறங்களுக்கு பயணிப்பவர்களுக்கும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்கும் வழக்கம் போல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்கு புத்தாண்டு காலத்தில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று போக்குவரத்துத் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Popular

More like this
Related

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...