மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கனடா நகர மேயர்கள் கண்டனம்

Date:

யாழ்மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமைக்கு ரொரண்டோ பிரம்டன் மேயர்கள் தங்கள் கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழர்கள் தொடர்ந்தும் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ள ரொரண்டோ நகரமேயர் ஜோன் டொரி இலங்கை அரசாங்கம் யாழ் நகரமேயரை கைதுசெய்ததை கண்டிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியுடன் இணைந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
யாழ் நகர மேயரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களை தானும் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களும் இந்த வேண்டுகோளில் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் தமிழ் சமூகத்துடன் ஒன்றிணையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் நகர மேயர் கைதுசெய்யப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கை போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் இது பிழையான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்,தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்காக அவர்கள் மனித உரிமை பேரவை தீர்மானத்துடன் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...