மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Date:

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 2ஆம்  கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
மாவட்ட ரீதியில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சுகாதார முன் கள பணியாளர்களுக்கு மேற்படி 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்றது.
குறிப்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட பொது வைத்திய சாலையில் பிரதான தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகையும் தலைமன்னார் எருக்கலம்பிட்டி ,அடம்பன் , முசலி பகுதிகளிலும் பிரதேச ரீதியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
அத்துடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை அடங்கிய துண்டு பிரதிகள் மற்றும் கையேடுகளும் வழங்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை தொடக்கம் எதிர் வரும் மூன்று தினங்களுக்கு குறித்த 2 ஆம் கட்ட   தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...