மாற்று மதத்தவர்களையும் கவர்ந்த ரமலான் | நோன்பு நோற்ற டேவிட் வோனர், கேன் வில்லியம்சன்

Date:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீட் கானுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோனர் மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் நோன்பு நோற்றுள்ளனர்.

ரமழான் மாதம் ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது இடம்பெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் வீரர்களான ரஷீட் கான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் நோன்பு நோற்று வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுடன் இணைந்து சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவரான டேவிட் வோனர் மற்றும் நியூஸிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் ஆகியோர் நேற்றையதினம் நோன்பு நோற்றுள்ளனர்.

குறித்த மூவரும் நோன்பு திறப்பதற்காக காத்திருக்கும் வேளையில் எடுத்த வீடியோ ஒன்றை ரஷீட் கான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் (Story) வெளியிட்டுள்ளார்.

உங்கள் அனுபவத்தை பகிருங்கள் என ரஷீட் கான் கோருகிறார்.

அதற்கு, டேவிட் வோனர் “நல்லம். ஆனால் எனக்கு மிகவும் தாகமாகவும், அதிக பசியாகவும் உள்ளது. எனது வாய் காய்ந்து போயுள்ளது. மிகவும் கஷ்டமான விடயம்” எனத் தெரிவிக்கிறார்.

“மிகவும் நல்லம். நன்றி” என கேன் வில்லியம்ஸன் தெரிவிக்கிறார்.

இதன் போது, இரு ஜாம்பவான்களும் எங்களுடன் இன்று நோன்பு நோற்றுள்ளனர். இந்த மேசையில் உங்களுடன் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என ரஷீட் கான் தெரிவிக்கிறார்.

தற்போது இடம்பெற்று வரும் IPL தொடரில், சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...