மியன்மாரில் இரத்த ஆறு ஓடுகின்றது | சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து | ஐ.நா பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை

Date:

மியன்மாரில் இரத்த ஆறு ஓடுகின்றது, சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதுவர் ஐ.நா பாதுகாப்புச் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மார் நிலை பற்றி ஆராய்வதற்காக 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையின் இரகசிய கூட்டம் இடம்பெற்ற போது அதில் பங்கேற்று விளக்கம் அளித்த மியன்மாருக்கான ஐ.நா தூதுவர் கிறிஸ்டின் ஸ்கிரேன்னர் பெர்க்னர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மியன்மார் இராணுவத்துக்கு எதிரான மக்கள் புரட்சி கட்டுக்கடங்காமல் செல்கின்றது. ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது. தினசரி நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடிய ஆபத்தான நிலை உருவாகி உள்ளது. சர்வதேச சமூகம் இனிமேலும் அமைதி காக்க முடியாது. உரிய நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்றும் வழிவகைகள் பற்றி ஆராய வேண்டும் என கிறிஸ்டின் ஸ்கிரேன்னர் பெர்க்னர் உருக்கமானதோர் வேண்டுகோளை பாதுகாப்புச் சபை முன் சமர்ப்பித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...