இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞர் மௌலானா வஹீதுத்தீன் கான். அஷ்ஷெய்க். ஏ. சீ. அகார் முஹம்மத் அவர்கள் அனுதாபம்.

Date:

முஸ்லிம் உலகம் மற்றுமோர் இஸ்லாமிய ஆளுமையை வழியனுப்பியது; இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞரே மௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள்.

அவர் ஒரு பன்முக ஆளுமை; ஒரு சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர்; அனைத்துக்கும் மேலாக ஒரு சிறந்த அழைப்பாளர்.

அவரது சில சிந்தனைகளுடனும் நிலைப்பாடுகளுடனும் முரண்படுவோரும் அவரது அறிவாளுமையை, சிந்தனா ஆற்றலை, இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கத் தவறுவதில்லை.

தனது இலட்சியப் பணியை தொடரக்கூடிய ஒரு சீடர் பரம்பரையை அன்னார் உருவாக்கிவிட்டே பயணித்திருக்கின்றார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நற்காரியங்களை ஏற்று, பாவங்களை மன்னித்து உயர் சுவன வாழ்வை வழங்குவானாக!

மௌலானாவின் பணியை தொடரும் உணர்வையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அவர்களின் மாணாக்கர்களுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கியருள்வானாக!

அஷ்ஷேக் அகார் முஹம்மத்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...