ஹொரவ்பொத்தானயில் கடந்த 3 நாட்களில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Date:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 17  தொற்றாளர்கள் கடந்த 3 நாட்களில் ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் இனங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று பாடசாலை மாணவர்களும், மூன்று சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் அடங்குவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நமடவெவ பகுதியில் 8 பேரும், வெலிமுவபொத்தான பகுதியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் ஒலுகஸ்கடவெல பகுதியைச் சேர்ந்த மூவரும் இவ்வாறு அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பரங்கியாவாடிய வித்தியாலயத்தின் பதினோராம் வகுப்பு மற்றும் நமடவெவ வித்தியாலயத்தின் இரண்டாம் வகுப்பு போன்றவற்றை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை அடையாளம் காணப்பட்டவர்கள் அனுராதபுரத்திலுள்ள மெத்சிறி செவன சிகிச்சை நிலையம் மற்றும் நொச்சியாகம மருத்துவமனையின் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...