இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை-வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவிப்பு!

Date:

இந்தியாவில் உருமாற்ற வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவுவதற்கான சான்றுகள் இருந்தாலும் இலங்கையில் அந்த வைரஸ் பரவுவதற்கான இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லையென நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு நிபுணத்துவ வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் முழுமையான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதன் மூலம் நாட்டின் வைரஸ் பரவலின் சரியான கணிப்பை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் பரவிவருகின்ற வைரஸ் புதிய மாறுபாடாக கூட உருமாறலாம் என்று ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.பண்டிகை காலத்திற்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் இணங்காணப்பட்ட தொற்றாளர்களிலிருந்து நாம் இதனை கணித்திருக்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை ‌பின்பற்றும் போது வைரஸின் பரவலை கண்டிப்பாக தடுக்க முடியும் எனவும் வைரஸ் பரவலின் சரியான கணிப்பு வெளியாகும் வரை இரண்டு மீட்டர் தூரத்தை பேணுமாறும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...