2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் பாதிப்பு!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போது ஒருநாள் பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 2 லட்சத்தை கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,40,74,564 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,038. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,73,123-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,24,29,564ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 14,71,877பேர் சிகிசையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.