`இந்தியாவுக்கு துணை நில்லுங்கள்..!’ – இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நெட்டிசன்கள் கோரிக்கை

Date:

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை தேவை என ட்விட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு இந்தியாவுடன் துணையாக நிற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டில் வாழும் மக்கள் ட்விட்டர் மூலமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதுடன், பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல்வேறு இழப்புகளை நாடு எதிர் கொண்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 25 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் மூலம் இறந்துள்ளனர், மேலும் 60 நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்த ஆக்சிஜன் அழுத்தமே இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் புது டெல்லியில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் கடந்த நான்கு நாட்களாக தங்களது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகத்தை நிரப்ப போராடி வருகின்றன. அவர்களில் சிலர் நோயாளிகளை மற்ற சுகாதார வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றுமாறும் டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன், கொரோனா மருந்துகள், மற்றும் ரெடெசிவிர் ஜாப்ஸ் போன்றவைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலை குறித்து குறித்து வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் கூறுகையில், மத்திய அரசு இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மருந்துகளை கையால்வது குறித்தும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையிலும், கொரோனா பாதித்த நோயாளிகளை மேலாண்மை செய்வது தொடர்பாகவும் தேசிய அளவிலான சட்டத்தை இயற்றும் என நம்பிக்கை தெரிவித்தது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை தேவை என ட்விட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.தொடர்ந்து #indianeedsoxygen என்ற ஹாஸ்டேக் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நெருக்கடி நிலையை போக்குமாறும், இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உதவுமாறும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் நாட்டு மக்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளனர். பாகிஸ்தானில் இந்த ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

 

Popular

More like this
Related

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...