இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்!

Date:

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சீனாவின் அதி உயர் பிரமுகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் எப்போது விஜயம் செய்வார் என்பது பற்றிய சரியான திகதி இன்னும் வெளியிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவின் பின்னர் பின்னர் நிச்சயமாக சீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...