இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்!

Date:

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சீனாவின் அதி உயர் பிரமுகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் எப்போது விஜயம் செய்வார் என்பது பற்றிய சரியான திகதி இன்னும் வெளியிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவின் பின்னர் பின்னர் நிச்சயமாக சீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...