இலங்கையில் 6 கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்

Date:

கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இப்படியான 6 கட்சிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த கட்சிகளின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு சிலர் உரிமை கோரியுள்ளதால், சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், இதனை தீர்க்க அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

வழக்குகள் முடிவடையும் வரை இந்த கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் காரணமாக குறித்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கட்சிகளின் பெயர்களை வெளியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...