ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு | இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

Date:

நாட்டில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பொது மக்கள் கொரோனா பரவாமல் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடைலை அடுத்து தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் மிகவும் புத்திகூர்மையுடையவர்கள். ஆகவே கொரோனா பரவாமல் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு தெரியும். அவர்கள் அதை செய்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் புத்தாண்டுக்குப் பின் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் பயணக்கட்டுப்பாடுகள், ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற செய்தி பரவலாக வெளியாகி உள்ளது.

எனினும் இலங்கை மக்களை மீண்டும் அவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயாரில்லை.

ஆகவே வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. எனினும் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...