ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி

Date:

ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள தூய முழங்காவில் மாதா ஆலய முன்றலில் இறுதி அஞ்சலிக்கான சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. யாழ்பாணத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகளும், வழிபாடும் இடம்பெற்றதை தொடர்ந்து ஆயரின் திருவுடல் மன்னார் எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் யாழ் மன்னார் வீதியில் குறித்த விசேட அஞ்சலி நிகழ்வு ஏற்பர்டு செய்யப்பட்டிருந்தது.

இதன்புாது அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சார்ள்ஸ்நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தொடர்ந்து ஆயரின் திருவுடல் வாகன பேரணியுடன் மன்னார் நோக்கி பயணித்திருந்தது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...