கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட மருத்துவர் பதவி நீக்கம்

Date:

தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் ஒருவரை சுகாதார அமைச்சர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

பிரபல சிறுவர் மருத்துவ இயல் நிபுணரான டாக்டர் லக்குமார்
பெர்னாந்து என்பவரே இவ்வாறு தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து சுகாதார அமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கொவிட் 19 தடுப்பூசி மருந்துகளுக்கு எதிரான அதிலும் குறிப்பாக சீனாவின் சினோபாம் தடுப்பூசி மருந்துக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டவர். இந்த covid-19 தடுப்பூசிகள் இலங்கையர்களுக்கு வழங்கப்படுவது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இருக்கின்றது என்றும், அதனை இப்போதைக்கு செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் இவர் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பல இடங்களில் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இவர் சிறுவர் மருத்துவ சங்கத்தின் பிரதிநிதியாகவே தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினராக இருந்து வருகின்றார். சுகாதார அமைச்சர் இவருடைய இந்த எதிர் நிலைப்பாடு காரணமாக அவரை குறிப்பிட்ட சபையில் இருந்து பதவி நீக்கம் செய்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...