கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட மருத்துவர் பதவி நீக்கம்

Date:

தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் ஒருவரை சுகாதார அமைச்சர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

பிரபல சிறுவர் மருத்துவ இயல் நிபுணரான டாக்டர் லக்குமார்
பெர்னாந்து என்பவரே இவ்வாறு தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து சுகாதார அமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கொவிட் 19 தடுப்பூசி மருந்துகளுக்கு எதிரான அதிலும் குறிப்பாக சீனாவின் சினோபாம் தடுப்பூசி மருந்துக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டவர். இந்த covid-19 தடுப்பூசிகள் இலங்கையர்களுக்கு வழங்கப்படுவது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இருக்கின்றது என்றும், அதனை இப்போதைக்கு செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் இவர் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பல இடங்களில் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இவர் சிறுவர் மருத்துவ சங்கத்தின் பிரதிநிதியாகவே தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினராக இருந்து வருகின்றார். சுகாதார அமைச்சர் இவருடைய இந்த எதிர் நிலைப்பாடு காரணமாக அவரை குறிப்பிட்ட சபையில் இருந்து பதவி நீக்கம் செய்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...