சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Date:

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் கோரியிருந்த தடை உத்தரவை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் வரை தொழில் வழங்குணர்கள் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவது அவசியமாகும்.

இதற்கு மாறாக செயற்படுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...