சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

Date:

மதுபோதையில் வாகனம் செலுத்தும் வாகன சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று (18) நண்பகல் 12 மணி முதல் நாளை (19) காலை 06 மணி வரை இந்த விசேட சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அதிவேக வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீதி விதிமுறைகளை மீறுவோர் குறித்தும் இன்று அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, அதிவேக வீதிகளின் பயணிக்கும் வாகன சாரதிகள், தமது பயண பாதையிலிருந்து தீடிரென மற்றைய பயண பாதைக்கு வாகனங்களை செலுத்த வேண்டாம் என அதிவேக வீதி நடவடிக்கை பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...