ஜனாதிபதியின் உத்தரவை மீறுவோர் இனம் காணப்படுவர்

Date:

ஜனாதிபதியின் உத்தரவுகளை மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றாத அதிகாரிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியாகியுள்ள ஆங்கில வார இதழ் ஒன்று பிரதான தலைப்புச் செய்தி தந்துள்ளது கடந்த ஆண்டு ஜனாதிபதி செயலகத்தால் அரச நிறுவனங்களுக்கு இரண்டு சுற்றுநிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நாட்டின் அரச நிர்வாகத்தின் கீழ் வரும் தகவல் தொழில்நுட்பங்கள் சம்பந்தமான அனைத்து விடயங்களையும் தகவல் தொழில் நுட்ப தொலைத்தொடர்பு முகவரா ண்மையான ICTA இன் கீழ் கொண்டுவருமாறு இந்த சுற்று நிருபங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் பல அரசாங்க நிறுவனங்கள் குறிப்பாக அரச வங்கிகள் இந்த சுற்று நிருபத்தை உதாசீனம் செய்துள்ளன இதனால் இது தொடர்பான விளக்கங்களை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு மற்றுமொரு சுற்றுநிறுபம் தற்போது அனுப்பப்பட்டுள்ளது ஜனாதிபதியின் உத்தரவுகளையும் அறிவுறுத்தலையும் மீறி செயற்படும் அதிகாரிகளை இனம் கண்டு அவர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரியவருகின்றது

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...