தாய்வானின் வான்பரப்புக்குள் அத்துமீறிய சீன யுத்த விமானங்கள்

Date:

தாய்வானின் வான் பரப்புக்குள் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு சீன யுத்த விமானங்கள் ஊடுருவியுள்ளதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 25க்கும் மேற்பட்ட சீனாவின்
குண்டுவீச்சு யுத்த விமானங்கள் மற்றும் அணு ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்தக்கூடிய விமானங்கள் உட்பட பல்வேறு விமானங்கள் தாய்வானின் வான்வழி பாதுகாப்பு அடையாளப்படுத்தல் வளையத்துக்குள் ஊடுருவியுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது.

சீனாவின் யுத்த விமானங்கள் பாரிய அளவில் தாய் வானுக்குள் ஊடுருவியுள் மை இதுவே முதற் தடவையாகும் இது சீனாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு வெறியை வெளிப்படுத்துவதாக அமெரிக்கா இந்த சம்பவம் குறித்து உடனடியாக கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தாய்வான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாநிலம் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. ஆனால் தாய்வான் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு பிரதேசம் என்பது சீனாவின் வாதமாகும். இந்த நிலைப்பாடுகள் காரணமாக இந்த வான் பரப்புக்குள் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...