தேங்காய் எண்ணெய் விவகாரம் | பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே | அமைச்சர் விமல் வீரவங்ச

Date:

தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவித்ததாவது,

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை சந்தைக்கு கொண்டுவந்துள்ளதாக சிலர் விமர்சிக்கின்றனர். புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு முதல் புற்றுநோயை ஏற்படுத்தும் பாம் ஒயிலே சந்தையில் இருந்தது.

மரக்கறி எண்ணெய் என நாம் உண்பது புற்றுநோயைதான். அந்த எண்ணெயில் எவ்வித மரக்கறிகளும் இல்லை.

கடந்த காலத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி எமது நாட்டில் வீழச்சிகண்டது. அதற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்வது கனவாக மாறியது. அதனால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதார அறிமுகத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு எண்ணெய்களை இறக்குமதி செய்து எமது பிள்ளைகளுக்கு ஊட்டினோம். இன்று அவர்களை நோயாளிகளாக மாற்றியுள்ளோம்.

பாம் ஒயிலுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் காரணமாகவே புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் குறித்து பேசுகின்றனர். இதன் பின்புலத்தில் உண்மையாக இருப்பது பாம் ஒயில் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும்தான் என்றார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...