தேசிய சராசரியை விட அதிகமான இறப்பு விகிதம்! – தடுமாறும் உத்தராகண்ட் அரசு

Date:

கொரோனா

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கபட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரனோவின் இரண்டாவது அலை மக்களையும், அரசையும், அடிப்படை வாழ்வியலையும் புரட்டி போட்டு வரும் இந்த வேளையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தேசிய சராசரியை விட அதிகமாகி நிற்கிறது உத்தராகண்ட் மாநிலம்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் ஒன்றான உத்தராகண்ட் மாநிலத்தில், அரசு பல்வேறு கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை அதிகபடுத்தியுள்ள போதும், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விகிதம் 4.1% ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.4% ஆக உயர்ந்துள்ளது, இது தேசிய சராசரியான 1.13% விட அதிகமாகும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர், குணமடையும் விகிதம் 69.96% ஆக உள்ளது. இந்த விகிதம் மார்ச் மாதம் வரை 95% ஆக இருந்தது. இரண்டாம் அலை கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இவர்களில் நேற்று மட்டும் 1,471 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஐந்து நாட்களில் மட்டும் 250 பேர் இறந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தொற்று பாதிப்பினால், அம்மாநில அரசு திங்கட்கிழமை முதல் வார ஊரடங்கை பிறப்பித்துள்ளது. டெஹ்ராடூன் மாவட்டம் அதிகபட்ச நோய்தொற்றுக்கு காரணமாக உள்ளது. மேலும் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கபட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சைக்கு என 52 சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...