நாங்கள் தெருக்களில் இறந்து கொண்டிருக்கின்றோம் அவர்கள் எங்கே?” இந்தியாவின் அவலநிலை தொடர்கின்றது..

Date:

கடந்த ஏழு நாட்களாக இந்தியா பாரியளவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீதத்தை கொண்டுள்ளது.கொவிட்டின் இரண்டாவது அலையில் 200,000 மாக எண்ணிக்கை தாண்டியுள்ளது.இந்தியாவில் ஆக்சிஜன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், நோயாளர்களுக்கான படுக்கைகளிற்கான எண்ணிக்கை போதாமையினாலுமே இவ்வாறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் குறிப்பிடப்படுகின்றது.இன்று முதல் (28)18வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மக்கள் தொகையில் 1.6% வீதமானவர்களே முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இந்தியாவிற்கான தடுப்பூசிகளை வழங்க ஜோ .பைடன் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இந்த நெருக்கடியான நிலையை முழு உலக மக்களுமே கண்டு வியப்படைந்துள்ளது.

“நாங்கள் தெருக்களில் இறந்து கொண்டிருக்கின்றோம் அவர்கள் எங்கே ” என்று தினமும் மக்கள் அல்லல்படுகின்றனர்.வாக்குகள் தேவைப்படும் போது அரச அதிகாரிகள் எங்களிடம் வருகிறார்கள் இப்போது நாங்கள் தெருக்களில் இறந்து கொண்டிருக்கின்றோம் “என மக்கள் குரல் எழுப்புகின்றார்கள்.

இந்தியா முழுவதும் ஆக்சிஜன் எண்ணிக்கை பற்றாக்குறை நிலவுவதால் ,ஒரு மணி நேரத்திற்கான ஆக்சிஜனே மருத்துவமனைகளில் காணப்படுகின்றது.

டெல்லியில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்க இடமில்லாததால் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் டெல்லி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பிவிட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை ஒருநாளில் மட்டும் டெல்லியில் 380 பேர் உயிரிழந்தனர்.

இந்திய அளவில் கடந்த சில நாள்களிலேய பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை ஒரே நாளில் 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

செவ்வாய்க்கிழமையன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 3,23,144-ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 1.7 கோடியை நெருங்கிவிட்டது. இவர்களில் 1.92 லட்சம் பேர் உயிரிழந்து விட்டனர்.

ஆனால் அரசின் புள்ளி விவரங்களைவிட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

என்டிடிவி நடத்திய ஒரு புலனாய்வில் டெல்லியில் கடந்த வாரம் வரை அரசு அளித்த புள்ளி விவரங்களைவிட 1,150 பேர் அதிகமாக இறந்திருப்பதாகத் தெரியவந்தது. நாட்டின் வேறு பகுதிகளிள் நடத்தப்பட்ட புலனாய்வுகளிலும் இதுபோன்று எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இரவும் பகலுமாக சுடுகாடுகளில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். விறகுகளை அடுக்குவது போன்ற வேலைகளை இறந்தவர்களின் உறவினர்களே செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மோடிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது.பலர் தங்களுடைய எதிர்ப்பை ட்விட்டரில் பதிவிட்டு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

என்டிடிவி நடத்திய ஒரு புலனாய்வில் டெல்லியில் கடந்த வாரம் வரை அரசு அளித்த புள்ளி விவரங்களைவிட 1,150 பேர் அதிகமாக இறந்திருப்பதாகத் தெரியவந்தது. நாட்டின் வேறு பகுதிகளிள் நடத்தப்பட்ட புலனாய்வுகளிலும் இதுபோன்று எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இரவும் பகலுமாக சுடுகாடுகளில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். விறகுகளை அடுக்குவது போன்ற வேலைகளை இறந்தவர்களின் உறவினர்களே செய்ய வேண்டிய நிலையாக உள்ளது.

“பிரதீப் மசும்தர் என்பவர் தன்னுடைய தாயின் நிலை பற்றி விவரிக்கும் போது,

வைத்தியசாலையில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது . என்னுடைய தாயின் ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டதாக அவர் என்னிடம் கூறினார்.எனவே கொல்கத்தாவில் கிட்டத்தட்ட 15 மருத்துவமனைகளில் அழைப்பை ஏற்படுத்திக் கேட்டோம் . எனினும் ‌ஒரு மருத்துவமனையில் மாத்திரமே ஆக்சிஜன் மற்றும் படுக்கை ஒன்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது.சில நாட்களின் பின்னர் தாயினுடைய நிலை சீராக இருப்பதாக கூறினார்கள் நாங்கள் மருத்துவ அறிக்கையை அவர்களிடம் கேட்டபோது தாய்க்கு கொவிட் இருப்பதாக கூறினார்கள்.இறுதியில் நாங்கள் வைத்தியரை நாடினோம் எனினும் அவரை தொடர்புகொள்ள முடியாமல் போனது.பின்னர் அரச மருத்துவமனைக்கு செல்வதற்கு தீர்மானித்தோம் அங்கிருந்த வைத்தியர் தாய்க்கு நிமோனியா இருப்பதாகவும், இரத்த அளவு குறைந்திருப்பதாகவும் , ஆக்சிஜன் தேவை உணரப்படுவதாகவும் கூறினார்.சிறிது நேரம் கழித்து என்னுடைய தாய் இறந்து விட்டார் என கண்ணீர் மழ்க தெரிவித்தார்.

“ருக்மிணி குமார் என்றவர் தன்னுடைய நான்கு வயது மகளிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை கடந்த புதன்கிழமை அறிந்து கொண்டார்.கடந்த வருடம் தனது முழுக் குடும்பமும் கொவிட் தொற்று ‌உறுதிப்படுத்தப்பட்டு அதிலிருந்து மீண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோயின் வலியை விட‌ என்னுடைய குழந்தையிடமிருந்து விலகியிருப்பது என்னை மிகவும் வருத்தத்தில் தள்ளுகிறது ,கண்ணாடி கதவின் வழியாக நான் அவளை பார்க்கிறேன் , நாங்கள் இருவரும் தொலைபேசியில் ‌உரையாடுகிறோம் என்று தெரிவித்தார்.

சுடுகாடுகளில் உடல்களை எரிப்பதற்கு நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது. உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். வரும் நாள்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுவதால் தற்காலிகத் தகன மேடைகளை அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடங்கள், பூங்காங்கள், காலி மைதானங்கள் போன்றவற்றில் தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதிற்குமான ஒரு மோசமான நிலையாகவே இவை உள்ளது.எனினும் மேற்கு மாநிலமான மகாராஷ்ட்ராவும் ,மும்பையும் கடுமையாக ‌பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கொவிட் இரண்டாவது அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மையமாக இது உள்ளது.இன்று காலை (28) தனியார் மருத்துவமனையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதில் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.இந்தியாவின் பழங்குடியான மத்திய மாநிலமான சத்தீஸ்கரில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றன.இதனால் மே மாதம் 6 வரை பூட்டப்பட்டுள்ளது.சராசரியாக ஒரு நாளைக்கு 17,600 தொற்றாளர்களும் ,246 இறப்புக்களையும் பதிவு செய்துள்ளது.மாநிலத்தின் பெரும்பகுதிகளில் மோசமான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் மேலும் நிலைமை மோசமடைந்துள்ளது.

“ராய்ப்பூரிலும் அதிக தொற்றாளர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக இதனை அதிகாரிகள் கூறுகின்றனர்.சுகாதார‌அமைச்சர் சமீபத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என தெரிவித்திருந்தார்.எனினும் ஆறு பொது மருத்துவமனைகளிலும் 37அரச கொவிட் மருத்துவமனைகளிலும் படுக்கைக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவே உள்ளது.

லக்னோ மருத்துவமனையில் இறக்கின்ற கொவிட் மரணங்களை வர்ஷா வர்மா தன்னுடைய சொந்த செலவில் தகனத்திற்காக கொண்டு செல்கின்றார்.ஒரு நாளைக்கு 8-12 உடல்களை இவ்வாறு கொண்டு செல்கின்றார் சில நேரங்களில் அவரே தகனங்களையும் செய்து விடுவதாகவும் , தன்னுடைய குடும்பம் இது விடயத்தில் அச்சம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இவை மிக முக்கியமான ஆதரவாக நான் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

ஆரம்பகட்டத்தில் கொவிட் தொற்று விடயத்தில் வெற்றியாகப் பாராட்டப்பட்ட இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் தற்போது ஏற்றத்தாழ்வான ஒரு நிலையை அவதானிக்கின்றோம்.தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ,இறப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் இவை நேற்றிரவு கடந்த 24 மணித்தியாலத்தில் 320000க்கும் மேற்பட்ட தொற்றாளர்களையும் ,32 இறப்புக்களையும் எண்ணிக்கை காட்டுகின்றது .இவற்றிற்கு கேரளாவின் பொது சுகாதாரம் இருப்பதாகவே காரணமாக உள்ளது.எனினும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் வீட்டில் வைத்து பராமரிக்கும் நிலைக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது.

” ஒரே நாளில் பிறக்காத என் குழந்தையையும், மனைவியையும் இழந்ததாக சச்சின் என்பவர் கண்ணீருடன் குறிப்பிடுகிறார்.அவர் மேலும் கூறுகையில் தன்னுடைய கர்ப்பிணி மனைவி இறந்தபோது யாரோ என் இதயத்தை என் மார்பிலிருந்து கிள்ளியெறிந்ததை உணர்ந்தேன் என்றார்.

1.3பில்லியன் மக்கள் வாழும் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த உலகமே சிந்திக்கின்றது.கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நோய்த்தொற்றுக்கள் மேலும் உருவாக வாய்ப்புள்ளது எனவே இந்த வேளையில் மனிதாபிமான காரணங்களை முன்வைத்து இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியமாகின்றது.

அப்ரா அன்ஸார்

1 COMMENT

  1. மிகவும் ஒரு காத்திரமான ஆக்கம்.

    இலங்கையர்களாகிய நாமும் மிகவும் அவதானத்துடன் இருப்போம்

Comments are closed.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...