புத்தாண்டை முன்னிட்டு பல பொருட்களின் விலையை குறைக்க அரசு தீர்மானம்

Date:

அரசாங்கம் எதிர்வரும் புத்தாண்டு பருவத்தில் பல பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.

நாட்டின் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் புதிய விலைகளின் கீழ் குறித்த பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (01) குறித்த அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, சந்தையில் தற்போது 150 முதல் 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிகப்பு சீனி ஒரு கிலோவினை 115 ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வணிக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற 100 கிராம் தேயிலை தூளின் விலை 135 ஆக காணப்படும் நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் 100 கிராம் தேயிலைத் தூள் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

தற்போது 550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி லீற்றர் சோயா எண்ணெயை 310 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

50 மில்லி லீற்றர் கை கழுவும் திரவம் 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

SLS சான்றிதழ் கொண்ட முகக்கவசத்தின் புதிய விலை ரூ .14 ஆகும். என்றார்.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...