மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

Date:

கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்பட்டதன் காரணமாக ‌அரசாங்கம் விவசாயிகளுக்கும் , நுகர்வோருக்கும் தற்காலிகத் தீர்வை வழங்கத் தவறியுள்ளதாகவும் குறித்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.

நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டிய அபாயத்தை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள தாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கொவிட் தொற்று காலப்பகுதியில் இதுபோன்ற முடிவுகளை எடுப்பது முக்கியம் என்றாலும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....