விரைவில் பொதுபல சேனா அமைப்பிற்கு தடை விதிக்கப்படுமா?

Date:

இலங்கையில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விரைவில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னிலங்கையில் செயற்பட்டு வருகின்ற கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களில் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பு முன்னிலை வகிக்கின்றது. முஸ்லிம் மக்களுக்கு விரோதமான அமைப்பாகவே இது கருதப்படுகின்றது.
குறிப்பாக, இனவாத செயற்பாடுகள், பேச்சுக்கள், மஹரகம மற்றும் அழுத்கம பகுதிகளில் ஏற்படுத்திய கலவர நிலைமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஞானசார தேரருக்கு எதிராக காணப்படுகின்றன. மேலும் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், பொதுபல சேனா அமைப்பு இனவாத செயற்பாட்டிற்கு ஆதரவாக இருந்து வருவதால் அதனை தடை செய்ய வேண்டும் என்கின்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமை பற்றிய சர்வதேச பிரகடனத்திற்கமைவாக, ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான பரிந்துரையை ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்திருந்தது. இதன் காரணமாக இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதோடு, எந்த வகையிலும் அந்த அமைப்பின் மீது தடையை அரசாங்கம் பிரயோகிக்காது என்பதை அரச தரப்பு அமைச்சர்களும் பொது மேடைகளில் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்படைத்த அறிக்கையை மீளாய்வு செய்து பரிந்துரைப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட துணை அமைச்சரவைக் குழுவே வழக்கு தாக்கல் செய்வதற்கான இந்த பரிந்துரையை முன்வைத்திருப்பதாக தெரியவருகின்றது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...