ஸ்டெர்லைட் ஆக்ஸிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும் | ஆலையை திறக்கலாம்!’ | உச்ச நீதிமன்றம்

Date:

`ஸ்டெர்லைட் ஆலையில் ஊர்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவார்கள்’ எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க அனைத்து கட்சிகளும் ஒப்புதல் வழங்கினர். அப்போது, தமிழக அரசு, `ஆக்ஸிஜன் உற்பத்தியை காரணமாக வைத்துக் கொண்டு ஆலையில் வேறு எந்த பிரிவையும் இயக்கக் கூடாது’ என வாதிட்டது.

தொடர்ந்து மத்திய அரசு, “ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்ஸிஜனை எங்களுக்கு தான் தர வேண்டும். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்கள்தான் பிரித்து வழங்குவோம்” என வாதிட்டது. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர், “உள்ளூர் மக்களை கண்காணிப்பு குழுவில் சேர்க்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட், “உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை மத்திய அரசு ஒதுக்குவதே முறை என ஏற்கெனவே ஒரு உத்தரவு இருக்கிறது. அரசின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படலாம். அப்போது ஆலை நிர்வாகமும் இருக்கலாம்” என்றார். தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு, “ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றார்.

ஆனால் தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு, சட்டம் ஒழுங்கு சிக்கலை காரணம் காட்டி உள்ளூர் மக்களை கண்காணிப்பு குழுவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், “ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது” என்றும் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அனுமதி அளித்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவை, தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு மையம் முடிவு செய்யும். இது தவிர்த்து உள்ளூர் மக்கள் கொண்ட மேற்பார்வை குழு ஒன்றையும் அமைக்கலாம். அதனை நிபுணர்கள் குழு தேர்வு செய்யும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஊர்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவார்கள் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க ஆக்ஸிஜன் தயாரிப்புக்கான அனுமதி மட்டுமே. வேதாந்தாவின் வேறு எந்த பணிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...