2020ல் அமெரிக்காவில் மோசமடைந்த மனித உரிமை மீறல்கள்

Date:

2020ம் ஆண்டு அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான கட்டத்துக்கு வந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபைக் குற்றம் சாட்டி உள்ளது. உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தலைமைத்துவம், அவரது ஆட்சிக் காலத்தில் கருப்பு இனத்தவர்கள் நடத்தப்பட்ட விதம், பொலிஸாரின் அட்டூழியங்கள், கொரோணா நோய் பரவல் நிலை என்பன அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் மோசமான கட்டத்துக்கு வரக் காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

பொது மக்கள் சட்டவிரோதமாகக் கொலை செய்யப்பட்டமை, பால் ரீதியான உரிமை மீறல்கள், சமாதானமான ஒன்று கூடல்களுக்கு எதிரான போக்கு என்பன உற்பட 15 வகையான மனித உரிமை மீறல்கள் அமெரிக்காவில் குறிப்பிட்ட ஆண்டில் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...