கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 34 வீதமானவர்களுக்கு உளவியல் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் | அமெரிக்க ஆய்வில் வெளியான புதிய தகவல்

Date:

கொவிட் -19ஆல் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் மூவரில் ஒருவருக்கு நீண்ட கால உளவியல் ஆரோக்கிய பிரச்சினைகள் அல்லது மூளையோடு தொடர்புடைய நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் புதிய ஆய்வின் மூலம் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 34 வீதமானவர்கள் உளவியல் அல்லது நரம்பியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைகளுக்கு ஆளாகி உள்ளமை தெரிய வந்துள்ளது. உளவியல் தொடர்பான அமெரிக்காவின் பிரபல சஞ்சிகை ஒன்று இந்த ஆய்வை நடத்தி உள்ளது. இந்த விடயம் தொடர்பாக விரிவான முறையில் நடத்தப்பட்டுள்ள முதலாவது ஆய்வு இதுவாகும்.

கொவிட்டால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 17 வீதமானவர்கள் பதற்ற நிலைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் 14 வீதமானவர்கள் மனநிலைக் கோளாறுக்கு ஆளாகி உள்ளனர். இன்னும் கணிசமான சத விகிதத்தினர் மோசமான நரம்பியல் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். கொவிட்டில் இருந்து மீண்டவர்களில் 39 வீதமானவர்கள் மீண்டும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோய் தாக்கம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...