இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

Date:

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது வேறு வரப்பிரசாதங்களை கோரினால் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு நீதித்துறை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய அமைச்சின் 0702724637 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 1954 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக கௌரவத்திற்குரிய சேவையொன்றை வழங்கும் வகையில் குற்றவியல் வழக்கு சட்ட ஏற்பாடுகளின் 108வது சரத்தின் கீழ் திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அவர்கள் குறித்த சேவையை நாளின் எந்தவொரு நேரத்திலும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர்களின் சேவைக்காக பணம் அல்லது வேறு அனுகூலங்களைப் பெற்றுக்கொடுப்பது சட்டவிரோதமான ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...

நாட்டின் பல பகுதிகளில் 30 – 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

இன்று (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...