2020ல் அமெரிக்காவில் மோசமடைந்த மனித உரிமை மீறல்கள்

Date:

2020ம் ஆண்டு அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான கட்டத்துக்கு வந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபைக் குற்றம் சாட்டி உள்ளது. உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தலைமைத்துவம், அவரது ஆட்சிக் காலத்தில் கருப்பு இனத்தவர்கள் நடத்தப்பட்ட விதம், பொலிஸாரின் அட்டூழியங்கள், கொரோணா நோய் பரவல் நிலை என்பன அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் மோசமான கட்டத்துக்கு வரக் காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

பொது மக்கள் சட்டவிரோதமாகக் கொலை செய்யப்பட்டமை, பால் ரீதியான உரிமை மீறல்கள், சமாதானமான ஒன்று கூடல்களுக்கு எதிரான போக்கு என்பன உற்பட 15 வகையான மனித உரிமை மீறல்கள் அமெரிக்காவில் குறிப்பிட்ட ஆண்டில் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...