2020ல் அமெரிக்காவில் மோசமடைந்த மனித உரிமை மீறல்கள்

Date:

2020ம் ஆண்டு அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான கட்டத்துக்கு வந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபைக் குற்றம் சாட்டி உள்ளது. உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தலைமைத்துவம், அவரது ஆட்சிக் காலத்தில் கருப்பு இனத்தவர்கள் நடத்தப்பட்ட விதம், பொலிஸாரின் அட்டூழியங்கள், கொரோணா நோய் பரவல் நிலை என்பன அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் மோசமான கட்டத்துக்கு வரக் காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

பொது மக்கள் சட்டவிரோதமாகக் கொலை செய்யப்பட்டமை, பால் ரீதியான உரிமை மீறல்கள், சமாதானமான ஒன்று கூடல்களுக்கு எதிரான போக்கு என்பன உற்பட 15 வகையான மனித உரிமை மீறல்கள் அமெரிக்காவில் குறிப்பிட்ட ஆண்டில் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...