ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து, எதிர்வரும் 21ம் திகதி முற்பகல் 8.45 மணி முதல் 2 நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21ம் திகதி, இலங்கை கத்தோலிக்க சபைக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்