Covid-19 Oxford AstrsZeneca தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு நாளை முதல் வழங்கப்பட உள்ளது

Date:

covid-19 முதலாவது சொட்டு தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது சொட்டு தடுப்பூசி வழங்கல் நாளை முதல் ஆரம்பம் ஆக உள்ளதாக மருந்துப் பொருள்கள் விநியோகத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இந்த இரண்டாவது சுற்றின் போதும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் முதலாவது சுற்று தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின .

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரோ சனிகா தயாரிப்புகள் 500000 சொட்டுக்கள் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனம் மேலதிக சொட்டுக்களை கொள்வனவு செய்து இருந்தது.
ஏற்கனவே 9 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு முதலாவது சொட்டு வழங்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அவர்களுக்கான இரண்டாவது சொட்டு வழங்கும் நடவடிக்கை நாளை முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...