Covid-19 Oxford AstrsZeneca தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு நாளை முதல் வழங்கப்பட உள்ளது

Date:

covid-19 முதலாவது சொட்டு தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது சொட்டு தடுப்பூசி வழங்கல் நாளை முதல் ஆரம்பம் ஆக உள்ளதாக மருந்துப் பொருள்கள் விநியோகத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இந்த இரண்டாவது சுற்றின் போதும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் முதலாவது சுற்று தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின .

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரோ சனிகா தயாரிப்புகள் 500000 சொட்டுக்கள் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனம் மேலதிக சொட்டுக்களை கொள்வனவு செய்து இருந்தது.
ஏற்கனவே 9 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு முதலாவது சொட்டு வழங்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அவர்களுக்கான இரண்டாவது சொட்டு வழங்கும் நடவடிக்கை நாளை முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...

விரைவில் 1990 சுவ செரிய மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை!

1990 சுவ செரிய அறக்கட்டளை, மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ...

நாட்டில் கடற்பகுதிகளில் பலத்த காற்று

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக...