இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்!

Date:

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சீனாவின் அதி உயர் பிரமுகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் எப்போது விஜயம் செய்வார் என்பது பற்றிய சரியான திகதி இன்னும் வெளியிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவின் பின்னர் பின்னர் நிச்சயமாக சீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...