இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் சீன பாதுகாப்பு அமைச்சர்

Date:

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாட்டை விட்டு வௌியேறியுள்ளார்.

இந்த விடயத்தினை தென்னிலங்கை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 27ஆம் திகதி இரவு அவர் இலங்கையை வந்தடைந்தார். இதயைடுத்து அவர் நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த அவர், குறித்த சந்திப்பின் ஊடாக இரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பு மேலும் வலுப்பெற்றதாக தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார். இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...