ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு | இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

Date:

நாட்டில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பொது மக்கள் கொரோனா பரவாமல் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடைலை அடுத்து தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் மிகவும் புத்திகூர்மையுடையவர்கள். ஆகவே கொரோனா பரவாமல் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு தெரியும். அவர்கள் அதை செய்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் புத்தாண்டுக்குப் பின் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் பயணக்கட்டுப்பாடுகள், ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற செய்தி பரவலாக வெளியாகி உள்ளது.

எனினும் இலங்கை மக்களை மீண்டும் அவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயாரில்லை.

ஆகவே வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. எனினும் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...