கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட மருத்துவர் பதவி நீக்கம்

Date:

தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் ஒருவரை சுகாதார அமைச்சர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

பிரபல சிறுவர் மருத்துவ இயல் நிபுணரான டாக்டர் லக்குமார்
பெர்னாந்து என்பவரே இவ்வாறு தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து சுகாதார அமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கொவிட் 19 தடுப்பூசி மருந்துகளுக்கு எதிரான அதிலும் குறிப்பாக சீனாவின் சினோபாம் தடுப்பூசி மருந்துக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டவர். இந்த covid-19 தடுப்பூசிகள் இலங்கையர்களுக்கு வழங்கப்படுவது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இருக்கின்றது என்றும், அதனை இப்போதைக்கு செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் இவர் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பல இடங்களில் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இவர் சிறுவர் மருத்துவ சங்கத்தின் பிரதிநிதியாகவே தேசிய ஒளடதங்கள் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினராக இருந்து வருகின்றார். சுகாதார அமைச்சர் இவருடைய இந்த எதிர் நிலைப்பாடு காரணமாக அவரை குறிப்பிட்ட சபையில் இருந்து பதவி நீக்கம் செய்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...