சிங்கராஜ பிரதேசத்தில் நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்துக்கு யுனெஸ்கோ எதிர்ப்பு

Date:

சிங்கராஜ வனப் பிரதேசத்தை ஊடறுத்து நீர்த்தேக்கம் ஒன்று நிறுவும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என யுனெஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பிரதேசம் உலக இயற்கை மரபுரிமைப் பிரதேசமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஒரு இடமாகும். எனவே இங்கு உத்தேச நீர்த்தேக்க நிர்மாணத் திட்டத்தை அனுமதிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

சிங்கராஜ வனத்துக்குள் மீகஸ்கெத்த பிரதேசத்தில் ஜின் கங்கைக்கு குறுக்காக நீர்த்தேக்கம் ஒன்றை நிர்மானிப்பதற்கான முன்மொழிவை நீர்ப்பாசனத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இலங்கையின் தென்கிழக்குப் பகுதிக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நீரை திசை திருப்பும் நோக்கில் இந்த அணையை நிர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பற்றி நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தன்னோடு கலந்துரையாடியதாகவும், உலக மரபுரிமைப் பிரதேசத்துக்குள் இவ்வாறான ஒரு திட்டத்தை அமுல் செய்ய முடியாது என தான் அவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கைக்கான யுனெஸ்கோ செயலாளர் நாயகம் கலாநிதி. புன்சிநிலமே மீகஸ்வத்த தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...