மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Date:

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 2ஆம்  கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
மாவட்ட ரீதியில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சுகாதார முன் கள பணியாளர்களுக்கு மேற்படி 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்றது.
குறிப்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட பொது வைத்திய சாலையில் பிரதான தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகையும் தலைமன்னார் எருக்கலம்பிட்டி ,அடம்பன் , முசலி பகுதிகளிலும் பிரதேச ரீதியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
அத்துடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை அடங்கிய துண்டு பிரதிகள் மற்றும் கையேடுகளும் வழங்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை தொடக்கம் எதிர் வரும் மூன்று தினங்களுக்கு குறித்த 2 ஆம் கட்ட   தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...