இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞர் மௌலானா வஹீதுத்தீன் கான். அஷ்ஷெய்க். ஏ. சீ. அகார் முஹம்மத் அவர்கள் அனுதாபம்.

Date:

முஸ்லிம் உலகம் மற்றுமோர் இஸ்லாமிய ஆளுமையை வழியனுப்பியது; இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞரே மௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள்.

அவர் ஒரு பன்முக ஆளுமை; ஒரு சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர்; அனைத்துக்கும் மேலாக ஒரு சிறந்த அழைப்பாளர்.

அவரது சில சிந்தனைகளுடனும் நிலைப்பாடுகளுடனும் முரண்படுவோரும் அவரது அறிவாளுமையை, சிந்தனா ஆற்றலை, இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கத் தவறுவதில்லை.

தனது இலட்சியப் பணியை தொடரக்கூடிய ஒரு சீடர் பரம்பரையை அன்னார் உருவாக்கிவிட்டே பயணித்திருக்கின்றார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நற்காரியங்களை ஏற்று, பாவங்களை மன்னித்து உயர் சுவன வாழ்வை வழங்குவானாக!

மௌலானாவின் பணியை தொடரும் உணர்வையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அவர்களின் மாணாக்கர்களுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கியருள்வானாக!

அஷ்ஷேக் அகார் முஹம்மத்

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...