ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… “தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை”

Date:

திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றிருக்கிறார், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !

சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை ஒவ்வொரு ஆண்டும் யார் பெறப்போகிறார் என்ற ஆர்வம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் இருக்கு. இந்த முறை 51வது தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு அறிவித்து கெளரவித்திருக்கிறது மத்திய அரசு.

சினிமா துறையில் சாதித்தற்காக கொடுக்கப்படும் விருதுதான், தாதாசாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் நினைவாக, இந்திய அரசு 1969-ம் ஆண்டிலிருந்து அவர் பெயரில் விருதினை வழங்கி வருகிறது. இதனை முதலில் பெற்றவர், இந்தி நடிகை தேவிகா ராணி. சமீபத்தில் 2018-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுத்து கெளரவித்தது இந்திய அரசு.

இதுவரை தமிழில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் இந்த உயரிய விருதினை பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, தற்போது, நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றிருக்கிறார். ஏற்கெனவே, மத்திய அரசுடைய பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை ரஜினிகாந்த் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விருதை அறிவித்துவிட்டு பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “தமிழக தேர்தலுக்கும் ரஜினிக்கு விருது அறிவித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.

நன்றி விகடன்

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...