வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது!

Date:

ஹம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியுறவு அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

23,746 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதி காட்டு யானை மேலாண்மை வனப்பகுதியாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் , குறித்த நிலப்பகுதியில் விமான நிலையமாக பெயரிடப்பட்டிருந்த 860 ஹெக்டேர் நிலப்பகுதி நீக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உரிய பிரதேசங்களான, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, லுனுகம்வெஹெர, மற்றும் தனமல்வில ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி அமைந்துள்ளதாக குறித்த வர்த்தமானி தெரிவிக்கின்றது.

இக் காட்டு யானை வனப்பகுதியை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு சூரியவெவ பகுதியின் விவசாயிகள் 86 நாட்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...