வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது!

Date:

ஹம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியுறவு அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

23,746 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதி காட்டு யானை மேலாண்மை வனப்பகுதியாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் , குறித்த நிலப்பகுதியில் விமான நிலையமாக பெயரிடப்பட்டிருந்த 860 ஹெக்டேர் நிலப்பகுதி நீக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உரிய பிரதேசங்களான, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, லுனுகம்வெஹெர, மற்றும் தனமல்வில ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதி அமைந்துள்ளதாக குறித்த வர்த்தமானி தெரிவிக்கின்றது.

இக் காட்டு யானை வனப்பகுதியை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு சூரியவெவ பகுதியின் விவசாயிகள் 86 நாட்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...