வை.எம்.எம்.ஏ(YMMA )யின் நாடளாவிய ரீதியில் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பம்.

Date:

இலங்கையில் தேசிய ரீதியில் இயங்குகின்ற மிகமுக்கியமான சமூக சேவை நிறுவனமான வை. எம். ஏ (YMMA) நாடளாவிய ரீதியில் நீண்டகாலமாக பல்வேறு சமூகப் பணிகளை இன, மத ,மொழி வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் ஒரு தொண்டு நிறுவனமாகும்.எனவே இந்த அடிப்படையில் மற்றுமொரு பொதுச் சேவை கட்டமாக தேசிய ரீதியில் நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது

புத்தளம் மாவட்டத்தில் அனைத்து இலங்கை வை . எம்.ஏ (YMMA) அமைப்பின் அனுசரணையில் நாடு முழுவதும் நீர் விநியோகத் திட்டத்தின் ஆரம்ப கட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கற்பிட்டிய பிரதேச செயலாளரினால் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளை வை.எம்.ஏ(YMMA) வின் தெரிவிக்குழு பார்வையிட்டது.இந்த மாநாட்டின் (YMMA) தேசியத் தலைவரான கே .என் டீன் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.அத்தோடு இந்த திட்டம் வை.எம்.ஏ வின் (YMMA) ரமலான் மாதத்திற்கான விசேட திட்டங்களில் ஒன்றாகும் .இந் நிகழ்வின் போது புத்தளம் மாவட்டத்தின் வை.எம்.ஏ (YMMA) தலைவர் முஜாஹித் நிசார் குறித்த பயனாளர்களுக்கான நிதியை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர் என்.ஆர் . எம்.எம் முஹ்சி, வை.எம்.ஏ (YMMA) கற்பிட்டியின் தலைவர் இர்பான் ரிஸ்வான் ,மேம்பாட்டு அலுவலகர் ஜின்னா அஸ்மியா மற்றும் பள்ளிu நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...