ஹிருணிகாவின் கோரிக்கைக்கு அமைய புதுக்கடைநீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தாய் பாலூட்டும் நிலையம்

Date:

ஹிருணிகாவின் கோரிக்கைக்கு அமைய
புதுக்கடைநீதிமன்ற கட்டிடத் தொகுதியில்
தாய் பாலூட்டும் நிலையங்கள் ஸ்தாபிப்பு

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தாய் பாலூட்டும் நிலையங்கள் ஸ்தாபிப்பு
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இரண்டு தாய் பாலூட்டும் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் தாய் பாலுட்டும் தாய்மார்கள் பயன்படுத்துவதற்காக நீதி அமைச்சினால் இந்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற வளாகத்தில் தாய் பாலூட்டும் நிலையங்களின்மையினால் தனக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி, ஹிருணிகா பிரேமசந்திர உறுமொழி வழங்கியிருந்தார். இதற்கமையவே குறித்த தாய்ப் பாலுட்டும் நிலையங்கள் விசேடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...