ஹொரவ்பொத்தானயில் கடந்த 3 நாட்களில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Date:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 17  தொற்றாளர்கள் கடந்த 3 நாட்களில் ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் இனங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று பாடசாலை மாணவர்களும், மூன்று சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் அடங்குவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நமடவெவ பகுதியில் 8 பேரும், வெலிமுவபொத்தான பகுதியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் ஒலுகஸ்கடவெல பகுதியைச் சேர்ந்த மூவரும் இவ்வாறு அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பரங்கியாவாடிய வித்தியாலயத்தின் பதினோராம் வகுப்பு மற்றும் நமடவெவ வித்தியாலயத்தின் இரண்டாம் வகுப்பு போன்றவற்றை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை அடையாளம் காணப்பட்டவர்கள் அனுராதபுரத்திலுள்ள மெத்சிறி செவன சிகிச்சை நிலையம் மற்றும் நொச்சியாகம மருத்துவமனையின் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...