இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை!

Date:

வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும், இரண்டாயிரம் கட்டில்களைக் கொண்ட கொவிட் மத்திய நிலையத்தை அமைச்சர் பார்வையிட்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை, இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...