இந்தியாவில் கொரோணாவின் மூன்றாவது அலை தாக்கத்தையும் தவிர்க்க முடியாது | விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Date:

இந்தியாவில் கொரோணா வைரஸ் தாக்கத்தில் இரண்டாவது அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மூன்றாவது அலைத் தாக்கம் ஒன்றும் தவிர்க்க முடியாததாகும் என்று அந்த நாட்டின் சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

நேற்று இந்தியாவில் புதிய கொரோனா தொற்றாளர்கள் நாலு லட்சத்து 12 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்துக்குள் மரணங்களின் எண்ணிக்கையும் 3980 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனிடையே தொடர்ந்தும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் பிரச்சினைகளை அனுபவித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கின்ற கொரோணா வைரஸ் ஆனது இரட்டை உருமாற்ற வீரியம் கொண்டது என்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிக மோசமான ஒரு வைரஸ் என்றும் ஒரே வைரசுக்குள் இருவகையான உருமாற்றங்கள் ஏற்படுவது இதன் உண்மை நிலை என்றும் அந்த நாட்டின் ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது பரவி வரும் வேகத்தில் மூன்றாவது அலை தாக்கம் தவிர்க்க முடியாததாக மாறிவிடும் என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட சிரேஷ்ட விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ஆஸ்பத்திரி கட்டமைப்புக்கள் மேலும் சிதைவடைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...