நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

Date:

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படையான ஐஆர்ஜிசி தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது மூன்றாவது நாளாக இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

ஈரான் மீது நடத்தப்படும் போர் தாக்குதலால் உலகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது.

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...